Maha Guru Sri Pappaiya Siddhar Jeevasamadhi
(Maintaining by Mahaguru Sri Pappaiya Siddhar Charitable Trust, Porayar). M.Trustee Smt.Punithadevi Inbarajan; 9894556720
Friday, 28 February 2025
Saturday, 13 March 2021
காலபைரவாஷ்டகம் (தமிழில்)
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் எனும் ஸ்ரீ பைரவர் போற்றி அஷ்டகமானது ஸ்ரீகுரு ஆதிசங்கரர் பெருமானால் இயற்றப்பட்ட பெருமைமிக்கதாகும். இப்பாடல் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றுள்ளது. அதனை அப்படியே பாடிடும் பொழுது மிகுந்த பலனைத் தரும். குருமார்கள் இயற்றிய ஸ்லோகங்களை அப்படியே பின்பற்றி நடப்பதே சாலச் சிறந்தது என்றாலும், அடியேன் நாமம், சிவ ஸ்ரீ குரு கோரக்கர் பெருமானின் திருவடி போற்றுகின்ற அடியார் கூட்டத்தாருள் ஒருவனாம் க.அன்பழகனாகிய எனக்கு ஒரு ஆழ்மன பேராசையின் வெளிப்பாடாக, நீண்ட நாள் எண்ணம் இன்று, 14/03/2021, ஞாயிறு அன்று காலை, ஸ்ரீகாலபைரவாஷ்டகத்திற்கு அதே தொனியில், தமிழில், யாவரும் படித்து, பாராயணம் செய்து பலன் பெற்றிட வேண்டும் என்ற பெரும் ஆசையின் காரணமாக, முதன்முதலில், நமது ஸ்ரீபாப்பையா சித்தர் பெருமானின் இணைய பக்கமான நமது தளத்தில் வெளியீடு செய்வதில், எனது பிறவியின் பயன்களில் ஒன்றை அடைவதாக அகமகிழ்கின்றேன். சிறு தவறுகள் இருப்பினும், அடியார்கள் அருட்கூர்ந்து, பொறுமையுடன் தெரிவிக்கலாம். திருத்திக்கொள்ள பணிவுடன் காத்திருக்கிறேன்.
ஓம் நமசிவய !
ஸ்ரீ காலபைரவாஷ்டகம்
பாடும் முறை:
(தான தான தான தான தான தான தானனா
தான தான தான தான தான தான தானனா
தான தான தான தான தான தான தானனா
தான தான தான தான தான தான தானனா)
இந்திரன் பணிந்திடும் தாமரை பூந்திருவடி
சந்திரனும் நாகமும் சூடிடும் ஜடாமுடி
நாரதரும் சாதகரும் போற்றும் கருணா மூர்த்தி
காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் ! 1
முக்திதரும் முதல்வனாம் ப்ரகாச கோடி சூரியன்
சக்திதரும் நீலகண்ட கால கால முக்கண்ணன்
தூயத்தாமரை கண்களாம் சொக்கட்டானில் சூரனாம்
காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் ! 2
சூல மழு பாச தண்ட பாணி முதல் காரணன்
மூல முதற்கடவுளன் அழிவிலா கரிய மேனியன்
பிணியிலா பெருமையன் முக்திசெல்வ தாண்டவப்பிரியன்
காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் ! 3
போகம் மோட்சம் அளிப்பவன் பிரசித்தி வடிவ அழகினன்
ஆகப் பெரும் அன்பு காட்டும் காவல் தெய்வம் ரட்சகன்
சலங்கை ஒலி இடையினன் அனைத்து உலக வடிவினன்
காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் ! 4
தர்மசேது காவலன் தீமை மார்க்க நாசகன்
கர்ம மாய மலங்கள் நீக்கி நற்சுகம் அளிப்பவன்
பொன் ஒளி சடையினன் உலகாளும் திருமேனியன்
காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் ! 5
ரத்ன பாதுகை சூடும் அழகொளி திருவடிவினன்
நித்யனாம் நிரஞ்சனாம் தூய்மை இஷ்ட தெய்வனன்
கூர்மை பற்கள் கொண்டவன் பாவ சத்ரு விநாசகன்
காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் ! 6
அட்டகாச ஒலியினன் பத்மண்டகோச அழிவினன்
சட்டநாதன் விழிகளால் பாவகுவியல் எரிப்பவன்
அஷ்ட சித்தி அருள்பவன் கபாலமாலை கழுத்தினன்
காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் ! 7
பூதங்களின் நாயகன் விசால கீர்த்தி தாயகன்
காசிபதி மாந்தர் புண்ணிய பாவ பரிசோதகன்
அனைத்து உலக கர்த்தனாம் ஆதியன் நிறை நீதியன்
காசிபதி ஆளும் கால பைரவரை வணங்குவோம் ! 8
காலபைரவாஷ்டகம் மனிதவாழ்வில் குதூகலம்
ஞானம் முக்தி சாதனம் வழங்குமே உயர் புண்ணியம்
சோகம் மோகம் கோபம் லோபம் தாபம் பொடிபடும்
காலபைரவ மூர்த்தி திருவடியருளும் கிட்டுமே! 9
Friday, 18 December 2020
Wednesday, 16 December 2020
அறக்கட்டளை நிர்வாக கூட்டம்
இப்படிக்கு,ஆலய நிர்வாகம்.
Tuesday, 8 August 2017
ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய!
குருவருளை வழங்கும் பாடல்
Saturday, 25 February 2017
நன்கொடை
நமது ஸ்ரீ பாப்பையா சித்தர் ஜீவசமாதி பீடமானது, மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தர் அறக்கட்டளை நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.
நமது ஜீவசமாதி பீடத்தில் அமாவாசை தோறும் நீத்தார் நினைவை போற்றும் வகையில் ஆத்ம பீடத்தில் வழிபாடு செய்து அன்னதானம் நடத்திடவும், பௌர்ணமி தோறும் ஸ்ரீ மகேஸ்வர பூஜை செய்து அன்னதானம் செய்வதால் மகான் ஸ்ரீ பாப்பையா சித்தர் குருவருளும் அதனால் நவநாத சித்தர்கள் மற்றும் பதினெண்சித்தர்களில் ஸ்ரீ பதஞ்சலி, ஸ்ரீ அகத்தியர்பெருமானின் குருவருளும் அதனால் எல்லாம்வல்ல ஸ்ரீ சிவசக்தியின் திருவருளும் பெற்று குறிப்பாக சித்தர்களின் தலைவராம் எம்பெருமான் ஸ்ரீ கோரக்கரின் கருணைமிகு பெரும் அருளும் பெற்று கர்ம வினைகளை போக்கிக் கொள்ளவும் விஜயம் செய்யுங்கள்.
நல்ல இதயம் கொண்ட, ஆன்மிக நாட்டம் கொண்ட, சித்தமார்க்கத்தில் ஆத்மார்த்தமான அன்புகொண்ட அன்பர்களே! ஸ்ரீ மகாகுரு பாப்பையா சித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பௌத்தபூரணி பவதாரிணியாய் விளங்கும் ஸ்ரீ சொர்ணமகாகாளி எழுந்தருளியுள்ள ஆலய விமானம் கட்டுவித்து கும்பாபிஷேகம் செய்திட திட்டம் உள்ளபடியாலும், அன்னதானம் தடையின்றி நடத்திடவும் பக்தர்களின் பேராதரவு வேண்டியுள்ளதால் நன்கொடையளிக்கும் நல்ல உள்ளங்கள் ஜீவசமாதி பீடத்தின் அறங்காவலர் ஸ்ரீ புனிதாதேவி இன்பராஜன் அவர்களையோ, நேரடியாக பீடத்திற்கு வருகைபுரிவோர் அலுவலக மேலாளரையோ அணுகிட வேண்டுமாய் வேண்டுகிறோம். அவ்வாறு அன்னதானம் உள்ளிட்ட பூஜைகளுக்கு நன்கொடை வழங்குவோர் உரிய ரசீதை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
தொடர்பு எண்: 9791486411 / 9626546885 / 9942544916
(குறிப்பு):
- நன்கொடையை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கு முன்னராக அறங்காவலரை தொடர்புகொண்டு பின்னர் செலுத்தலாம். உரிய ரசீதை நேரடியாகவோ/ தபால் வழியாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
- ஜீவசமாதி பீடத்தின் பூஜைகள், குருபூஜை, பெளர்ணமி அன்னதானம் மற்றும் இதர பூஜைகள் பற்றிய அறிவிப்பு உங்களை வந்தடைய நீங்கள் விரும்பினால் பீடத்தின் இ-மெயில் முகவரிக்கு, I am interested to receive Notifications by SMS / e-Mail / Phone / Post என டைப் செய்து,உங்களின் பெயர், முகவரி, மொபைல் எண், வாட்ஸ்-அப் எண் ஆகியவற்றை தெரிவித்தால் பீடத்தின் தகவல் குறிப்பில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு, ஐயனின் அருளை உரிய நேரத்தில் நீங்கள் பெற்றிட உதவும் என்பதை அறியவும். எமது இ-மெயில் முகவரி: mahagurusripappaiya2020@gmail.com