Wednesday 16 December 2020

அறக்கட்டளை நிர்வாக கூட்டம்

அன்பர்களுக்கு வணக்கம் ! கடந்த 15/12/2020 அன்று செவ்வாய்க்கிழமை நமது நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ புனிதாதேவி இன்பராஜன் மற்றும் மடாதிபதி ஸ்ரீ தமிழினியன் சுவாமிகள் முன்னிலையில் நிர்வாக அறங்காவலர் உறுப்பினர்கள் திரு வெங்கடேஷ், குமாரி ரஞ்சிதா மற்றும் பக்தர்கள் திரு. திருமால், திரு.உலகநாதன், திரு ஹரி கிருஷ்ணன்,  திரு.சிவானந்தம், திரு.க.அன்பழகன், திருமதி.கலைச்செல்வி, திருமதி.முத்துலெட்சுமி, திருமதி.சோனா மற்றும் அர்ச்சகர் திரு கிருஷ்ணன், திரு. கணேஷ் மற்றும் இதர பக்தர்கள் ஆகியோர் முன்னிலையில் அறக்கட்டளை எதிர்காலம் குறித்தும் மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி படத்தில் வருகின்ற 25/01/2020, திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ பாப்பையா சுவாமியின் குருபூஜை நடத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஆலய சீரமைப்பு, பந்தல் போடுதல், ஒலி ஒளி அமைப்பு, அன்னதானம், துறவிகளுக்கான வஸ்திர தானம், சித்தர் வழி வேள்வி நடத்துதல், அன்னதான கூடத்தின் இருக்கைகள் புதிதாக மாற்றுதல், கழிப்பிட, குளியல், துறவி குடில் அறைகள் புதுப்பித்தல்,  பீடத்தை சுற்றியுள்ள முள்வேலி சீரமைத்தல் ஆகியன விவாதிக்கப்பட்டது. மேலும், மகானின் குருபூஜை குறித்த பத்திரிகைகள்,போஸ்டர்கள் அச்சடித்தல் மற்றும் அதனை விநியோகித்தல் தொடர்பாக பேசப்பட்டது. குருபூஜை விழாவிற்கு உபயதாரர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. மற்றும், முக்கியஸ்தர்கள் வரிசையில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஒன்றிய தலைவர் மற்றும் இதர முக்கிய அதிகாரிகளை அழைப்பது  தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கண்ணுறும் அன்பர்கள், பக்தர்கள் மகாகுருவின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள தயாராகும்படி மிகவும் அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
ஆலய நிர்வாகம்.

No comments:

Post a Comment