Tuesday 8 August 2017

ஓம் நமசிவாய!

அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வையகம், வாழ்க யாவரும் நலமுடன்! எல்லாம் வல்ல எம் முழுமுதற்கடவுளாம் கணபதியை பணிந்து, எம் குலதெய்வமாம் ஞான சாஸ்தாவாம் அருள்மிகு குட்டியாண்டவரின் பொற்பாதங்கள் சரணடைந்து, எல்லாம் வல்ல என் அப்பன், எம் இஷ்ட தெய்வமாம் கந்தகோட்டத்துள் வாழ் அருள்மிகு செல்வமுத்துகுமாரசாமியாய் விளங்கும் கந்தபெருமானின் நிறைந்த அருளோடும், கருணைக்கடலாய் திருவாரூரின் கண் மடப்புரத்தே அருளாட்சி கடாட்சித்து காத்திடும் அடிமுடி காண இயலா, எம்பெருமானாகிய திரு அண்ணாமலையாரின் அவதாரமாக விளங்கும் எம் குருதெய்வம் அருள்மிகு குரு தெட்சிணாமூர்த்தியின் கடைக்கண் அருளால் உயிர்வாழும் இவன் பெயர் அன்பழகன் என்பதாகி, நவநாத சித்தர்களுள் மூன்றாமிடத்தும், பதினென்சித்தர்பெருமக்களுள் முக்கியமானவருமாகிய கருணைபொழியும் அருள்வள்ளல், பாமரரையும், எளியவரையும், பாவிகளையும், வாழ்க்கை பாதிப்புகளால் நிம்மதியிழந்த எவரையும் தம் கருணை உள்ளத்தின் ஊற்றாகிய அன்பினாலும், அருளாலும், காத்திடும், எம் ஐயன் அருள்மிகு கோரக்கர் பெருமான் அவர்களின் சீடராய் விளங்கிய, முற்பிறவியில், பௌத்தமத துறவி, அருள்மிகு சானாஷ்ட புத்தராய் விளங்கி, பின்னர், இசுலாமிய மதம் சார்ந்த அருள்மிகு பாப்பையா சித்தராய் உருவெடுத்து, நாகப்பட்டிணம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகில் ஜீவசமாதி கொண்டு அருளாட்சி செய்திடும் எம் மகாகுரு அருள்மிகு பாப்பையா சித்தர் அவர்கள் சார்ந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த வலை இதழை துவக்கியுள்ளேன். இதைக் கண்ணுறும் அன்பர்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை எமக்கு தந்துதவி, அஃது, வரும் காலங்களில் மற்ற அன்பர்களுக்கும் உதவிட துணைபுரிய வேண்டுகிறேன்.

ஓம் நமசிவாய!

No comments:

Post a Comment