14/12/2016, புதன் கிழமை அன்று, மாலை, 6.30 அளவில் எம்குரு ஸ்ரீ மகாகுரு பாப்பையா சித்தர் அவர்களின் நட்சத்திர ஹோமம் நடைபெற்றது. குருவின்பால் அன்பு கொண்ட பலரும் கலந்துகொண்டு குருவருளை பெற்றனர். ஐயா இன்பராஜ் அவர்கள் உருவில் ஸ்ரீ மகாகுரு பாப்பையா சித்தர் செய்திட்ட ஹோமம் மிகவும் மிகவும் சிறப்பு... என்று சொல்லும் தகுதி அடியேனுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி ஒரு மகா சிறப்பாக ஹோமம் அமைந்தது. ஐயனின் அருள்வாக்கில், மகா பிரளயம் ஒன்று இருப்பதாக சொ ல்கின்றார். சித்தர் பெருமக்கள் அனைவரும், இவ்வுலகின் நிலைப்புக்காக செய்திடும் அரிய முயற்சிகள் சொல்லப்பட்டது. எனவே, மக்கள் அனைவரும், நற்செயல்கள் செய்ய இயலாவிடினும், பாவசெயல்களை தவிர்த்தாலே இவ்வுலகம் நீடிக்கும் என்பது இவனின் கருத்து...
No comments:
Post a Comment