Wednesday, 18 January 2017

செல்லும் வழி

  •  சென்னையிலிருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், பொறையார் பகுதியைக் கடந்தே (ECR) செல்லவேண்டும். கார்களில் செல்வோர் தரங்கம்பாடி கடந்ததும், இராஜீவ்காந்தி சிலையை ஒட்டி, வலது புற சாலையில் திரும்பி பொறையார் பேருந்து நிலையம் எதிரில், வலதுபுறம் திரும்பி, ஆலயம் செல்லலாம். 
  • சஷ்டியப்தபூர்த்தி போன்ற (60ம் கல்யாணம்),  விழாவை வெகுசிறப்பாக செலவிட்டு திருக்கடையூரில் கொண்டாடும் அன்பர்கள், இந்த ஆலயத்திற்கும் சென்று மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தரின் குருவருளும், அம்மா அருள்மிகு ஸ்ரீ பெளத்தபூரணி பவதாரிணி சொர்ணமகாகாளியின் திருவருளையும் பெற்று வரலாம்.
  • திருவிடைக்கழி சென்று ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணியப்பெருமானையும், ஸ்ரீ பாவவிநாசனப்பெருமானையும் ஒருசேர வணங்கி அருள்பெறும் அன்பர்கள், அங்கிருந்து தில்லையாடி வழியே பொறையார் வந்து இந்த ஆலயத்திற்கும் சென்று மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தரின் குருவருளும், அம்மா அருள்மிகு ஸ்ரீ பெளத்தபூரணி பவதாரிணி சொர்ணமகாகாளியின் திருவருளையும் பெற்று வரலாம்.
  • குறிப்பு: இத்தகு ஜீவசமாதி ஆலயத்திற்கு சென்ற அன்பர்கள் தம்  மனதில்,ஒரு விவரிக்க இயலாத மன அமைதி கிடைப்பதை உணரலாம். உங்கள் கோரிக்கைகள் நியாயமாக இருக்கும்பட்சத்தில் அவை நிறைவேறுவதை நீங்கள் உணரலாம். 

No comments:

Post a Comment